×

பங்குனி அமாவாசை உப்புபாளையம் வீர மாத்தியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

க.பரமத்தி, ஏப். 5: க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நேற்று பங்குனி அமாவாசையையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

இதேபோல் குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், குன்னுடையான், பொன்னர் சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் தெய்வங்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதேபோல குப்பம் பொன்காளியம்மன், ஆரியூர் செல்லாண்டியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் கோயில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

Tags : Marai Amavasu Uthuppalayam Veera Madhamman Temple ,
× RELATED குளித்தலை அருகே கல்லூரி மாணவிகளின் வேளாண் கண்காட்சி